செவ்வாய், 6 டிசம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 5




இதழ் - 6 ( 09.2005)

1.                       மேடையில் பேசினார்
        சின்னத்திரை இயக்குநர்
        அழுவாமல்...
-       செஞ்சி தமிழினியன்

2.                  திட்டத்தை நிறைவேற்றியது
      மழைநீரை சேகரித்தபடி
      சாலையில் குழி!
-       செந்தில் பாலா

3.               இடிபாடுகளில் சிக்கியும்
     உயிரோடு இருக்கிறேன்
    பேருந்து பயணம்.
-       கு.கிரிஜா

4.               நின்றது மழை
    எங்கே விழுந்ததோ
    கடைசித்துளி!
-       நாணற்காடன்

5.             தோன்றிய கவிதை
    நசுங்கிப் போனது
   பேருந்து நெரிசலில்...
-       இரா.தேவசேனா


இதழ் - 9 ( 03.2006)

1.                         உண்டு இல்லை என்று
          உண்டில்லாமல் செய்கிறது
          வருடந்தோரும் நுழைவுத்தேர்வு

                          - செந்தில் பாலா

சனி, 3 டிசம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 4


குறிஞ்சி வட்டம் நிகழ்ச்சி பதிவிதழ் இதழ் - 5 ( 08.2005)




1.                       இலவச பொருட்களோடு
        சுடச்சுட விற்பனை
        குங்குமம்
-       சு.கணேஷ்குமார்

2.                   ஆரியன்
       சரியாய்ச் சொன்னால்
       அந்நியன்!

3.                    மரம் நடு விழா
       கூட்ட நெரிசலில்
       மிதிபட்டது கன்று

4.                   பால் கொடுத்தாள் அம்மா
      குழந்தை உறங்கியது
      நீண்டநேரம் அழுதது கள்ளிப்பால்

-       செஞ்சி தமிழினியன்




5.               சலுகைகள் சலுகைகள்
    அரசு பணத்தில்
    ஓட்டு வேட்டை

6.              இந்த இடம்
    இன்னொருவருக்கும் உதவலாம்
    கட்டாதிர்கள் சமாதி

-       செந்தில் பாலா

7.                    திருமணப் பந்தி
       பெருமித்த்தில் மனம்
       அதிகமாய் ஓர் அப்பளம்!

8.                   காட்சிக் கூடம்
       தொங்கும் ஓவியங்கள்
       பறந்து பார்க்கும் ஈ!

9.                   வெளியீட்டு விழா
       நிறையப் பேசினர்
       விற்காமல் புத்தகங்கள்!

-       அமுதபாரதி

10.                  இரும்பிய நோயாளி
         நினைத்து எழுதினார் மருத்துவர்
         இருப்பு குறையும் மருந்து

-       ஆலா




11.           உறங்கும் குழந்தை
         அமைதி காக்கின்றன
         பொம்மைகள்

12.                  நீண்ட ராப்பயணம்
        துணையாய்
        காலடியில் இசை

-       இரா.தேவசேனா

வியாழன், 1 டிசம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 3

குறிஞ்சி வட்டம் நிகழ்ச்சி பதிவிதழ் - 4 இல் இருந்துதான் அதிகமான ஹெக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவ்விதழில் இடம்பெற்ற பாரதிமணியனின் பனங்காய் வண்டி பிற்பாடு அதே தலைப்பில் நூலாக வெளிவந்தது. 







  இதழ் - 4 (07.2005)

1.    பேருந்து இருக்கை
              இடம் பிடித்திருக்கிறது
               ஒற்றை மல்லிகை

2.    மரக்கிளையில் தொங்கும்
              விறகுவெட்டியின்
,             சோற்றுச் சட்டி.
      -       நாணற்காடன்

3.    மார்கழி இரவு
              குளிரில் நீந்தும்
              மீன்கள்
-       சு.கணேஷ்குமார்

4.    காயம் ஆறுவதற்குள்
தீர்ந்து விடுகிறது
மாத்திரை.
-       மு.குணசேகரன்

         



       பனங்காய் வண்டி: பாரதிமணியன்

1.                                  அதிக வட்டி அதிக வட்டி
             முதலீட்டாளர்களுக்கு
              நாமக்கட்டி!

2.                                 சாதி வாழ்க சாதி வாழ்க
             வாழ வேண்டாமா
             சாதி தலைவர்

3.                                மழை நாளில்
             குடையும் தொலையும்
             திருமண வீடு!

4.                               வாங்கிய கடனில் விளைந்த நெல்
             கடன்போக மீந்தது
             பெரிய வைக்கோற்போர்!

5.                                ஐந்து லிட்டர் கேனில்
             ஏழு லிட்டரும் கொள்ளும்
             ரேசன் கடையில்!

6.                                பேருந்தில் பிதுங்கும் கூட்டம்
              நடந்தால் நல்லது
              மாதக்கடைசி!

7.                                   புது டயர் மாற்ற
              கிடைத்த பழைய டயர்
              பையனுக்குக் கிடைத்த புது வண்டி

8.                                    எத்தனையோ புத்தகங்கள்
               வாங்க காசில்லை
               சுண்டல் மடித்த காகிதமே சுவை

9.                                    மின்சாரம் இல்லாத
               புழுக்க ராத்திரி
               படிக்க ஆசை

10.                               கிரிவலம்
               உடனடி பலன்
               கால்வலி!

புதன், 30 நவம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 2



குறிஞ்சி வட்டம் நிகழ்ச்சி பதிவிதழில் வெளியானவை.



இதழ் - 2 (5.2005)

1.               எகிப்தில் பிணம்தான் மம்மி
    அப்படி அழைக்கச் சொல்லும் பெண்களைச்
    சவம் எனச் சொல்லியடி கும்மி

-       கன்னிக்கோயில் ராஜா

2.    பெருமழை இரவு
படுக்கையில் பெயரன் கேட்டான்
தாத்தா காக்கா எங்கே தூங்கும்?

-       அமுதபாரதி


இதழ் - 3 ( 06.2005)

1.    ரசிக்கத் தெரியாதவர்கள்
அமரவேண்டாம் பேருந்தில்
ஜன்னலோரம்!

-       பி.ரமா

செவ்வாய், 29 நவம்பர், 2011

சூரியனார் கோயில் சிற்பங்கள்



ப்



























Posted by Picasa

ஹெக்கூ கவிதைகள் - 1


குறிஞ்சி வட்டம் செஞ்சியில் மாதம்தோறும் நடந்துவந்த/ இப்போதும் அவ்வப்போது நடந்துவரும் சமூக கலை இலக்கிய நிகவுழ்களுக்கான அமைப்பு. இவ்வமைப்பின் சார்பில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்யவென்றே ஒரு சிறிய கையடக்க அளவில் இலவச இதழ் 4.4.2005 முதல் ஏப்ரல் 2007 வரை 16 இதழ்கள் வெளியிடப்பட்டன. அதில் இடம்பெற்ற ஹெக்கூ கவிதைகள் இங்கே ஒரு தொகுப்பாக பதிவு செய்யப்படுகின்றன.

இவை சமகாலத்தின் பிரதிபளிப்பாகவும், சமூகவியல், சூழலியல், அழகியல், தலித்தியல், பெண்ணியம், தமிழுணர்வு என பலதளங்களில் விரிந்து நம் கருத்திற்கு சுவை பயக்கின்றன.   - ஜெ.ரா



இதழ் - 1 (4.4.2005)

1.                பார்வையற்றோர் பள்ளி
     சுதந்திர தினவிழா
     நிறமில்லா கொடி!
-   நாணற்காடன்

2.                கை நிறைய குங்குமம்
     வைத்துக்கொள்ள மனமில்லை
     மகள் விதவை
-    வி.எஸ்.சங்கீதா

3.                விழுவது எழுவதற்கே
     உணர்த்துகிறது
     மழைத்துளி!
-   இரா.தேவசேனா

4.                எதை எதையோ
     நினைவுபடுத்தும்
     ஞாபக மறதி!
-   க.பாரிஷா

5.               தேர்வு முடிவு
     ஆயத்தமாய்
     சில தூக்குக் கயிறுகள்

                             - இரா.சரவணன் 


காலாண்டிதழ் 4:    அக்டோபர்-டிசம்பர் 2003









புதன், 12 அக்டோபர், 2011

துளிப்பா நாற்பது - பா.சாமி





01.  
கனிந்தும்
கசக்கிறது
முதுமை

02.  
பிடிக்காத சினிமா
விசில் சத்தம் கேட்டது
குக்கரில்

03.
  காட்டில் கூட
கார்த்திகை தீபம்
மின்மினி

04.  
புதைத்துவிட்டேன்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தது
விதை

05.  
இவ்வளவு விழுதுகள் இறங்கியும்
நிலைக்காத ஆலமரம்
மேகம்




06. 
இலைக்குக் கீழ்
உணவு பரிமாறும்
வாழை

07.  
உலகெல்லாம்
வளரும் வீடுகள்
வீடின்றி தவிக்கும் பறவை

08.  
யாரிடம் வழக்குரைக்க
இந்த ஓட்டம்
தலையிழந்த கோழி

09.
  காரணம் மறந்தது
காரியம் தொடர்ந்தது
சண்டை

10. 
மின் வெட்டு
தந்தை மகிழ்ந்தார்
டிவியில் ஆபாசம்




11.  
சேர்ந்தன செங்கல்
சிதறியது பூசணி
புது வீடு

12.  
இதற்காகவா தவம்கிடந்து
சிறகு வாங்கினோம்
விட்டில் பூச்சி

13. 
எங்கள் வீட்டில்
வைத்தது வைத்தபடி
மரத்தூண்கள்

14.  
எழுப்புவதற்கு
அலாரம் வைத்தேன்
அதுவும் என்னுடன் தூங்கிவிட்டேன்


15. 
என்ன நோய்
எதற்கு அக்குபஞ்சர்
சப்பாத்திக் கள்ளி




16.  
பின்னப்பட்டது சடை
களைந்தது
மார்டன் ஆர்ட்

17.  
கிணற்றில் நீர் ஊற்றினேன்
உள்ளே ....
காய்கறித் தோட்டம்

18. 
குழி விழுந்தது
அதில் நானும் விழுந்தேன்
அவன் கன்னம்

19.  
விடியலில்
நட்சத்திரம்
வீட்டு வாசலில்

20.
  வேகாத வெயிலில்
வெந்துபோனது
கால்




21.  
வேலியைத் தாண்டி
வந்தது
மல்லிகையின் மணம்


22. 
காறி உமிழ்ந்தேன்
சிரித்தது
கல்லில் பற்பசை நுரை

23.  
பகலில்
தூங்குகிறது
இரவு

24.
  மடியில் கனம் இருந்தது
வழியில் பயம் இல்லை
பசு

25.  
தண்டவாளத்தில்
எதிரும் புதிரும்
எறும்புகள்




26.  
வைகறைப் பொழுதில்
வியர்த்தது
புல்லுக்கு...

27.  
இன்று   ஹோலியோ
சமையலறையில் புகுந்த
பூனைக்கு

28.  
முறிந்து விழுந்த மரத்திலிருந்து
தப்பிப்பறந்த இலைகள்
கிளிகள்


29. 
எப்போது பந்த்
எப்போதுவரும் இடிமழை
பள்ளிச்சிறார்




30. 
வரதட்சணைக் கேட்டவனுக்கு
பிறந்தது
ஐந்தும் பெண்

31. 
கீழே விழுந்து
உடைந்தது கண்ணாடி
அமைதியாய் பூனை

32.  
வேட்டியைப்
போர்வையாக்கியது
தெருக்கூத்து

33. 
கண்ணீர்த்துளியை
துடைத்தன
வியர்வைத் துளிகள்

34. 
இல்லை மனிதன்
இச்சுக்கொட்டியது பல்லி
ஓடி வந்தது நாய்

35.  
கல்லடிக்கு பயந்த
எங்கள் மரம்
காய்ப்பதே இல்லை




36. 
நிலவு
புளிக்கிறது
எட்டாக்கனி ஆனதால்

37.  
கட்டமான கல்
வட்டம் போட்டது
குளத்தில்

38.  
வெட்ட வெட்ட
துளிர்க்கிறது சாதி
மயிர் என்று சொல்லலாமா

39.  
கருவுறாமல்
பிறந்தது
புத்தாண்டு

40.  
கொசுக் கூட்டத்தில்
தொலைந்தது
என் கனவு

 நான் மயிலம் தமிழ்க்கல்லூரியில் பி.லிட் படிக்கும் காலத்தில் தேன்துளி என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் ( 2000-2002 ) நடத்தினேன்.அக்காலங்களில் அப்பத்திரிகையின் துணை ஆசிரியராய் இருந்த பா.குப்புசாமி அவர்கள் அவ்வப்போது ஐக்கூ கவிதைகள் எழுதியுள்ளார். எளிய மன உணர்வுகளின் வெளிப்பாடான அவற்றை அண்மையில் என் பழைய கையெழுத்துப் பிரதிகளில் கண்டு ரசித்தேன். அதை அப்படியே பதிவு செய்யவேண்டும் என தோன்றியது. இதோ பதிவு செய்துவிட்டேன். இதுவே 07.11.2011 திருமணம் காணவுள்ள அவருக்கு எனது நினைவு பரிசாக அமையட்டும்.

- ஜெ.ரா 

( புகைப்படங்கள்: இரா.செல்வனின் புகைப்பட கருவியில் பனமலையில் என்னால் பதிவு செய்யப்பட்டவை.)