இதழ் - 6 ( 09.2005)
1. மேடையில் பேசினார்
சின்னத்திரை இயக்குநர்
அழுவாமல்...
- செஞ்சி தமிழினியன்
2. திட்டத்தை நிறைவேற்றியது
மழைநீரை சேகரித்தபடி
சாலையில் குழி!
- செந்தில் பாலா
3. இடிபாடுகளில் சிக்கியும்
உயிரோடு இருக்கிறேன்
பேருந்து பயணம்.
- கு.கிரிஜா
4. நின்றது மழை
எங்கே விழுந்ததோ
கடைசித்துளி!
- நாணற்காடன்
5. தோன்றிய கவிதை
நசுங்கிப் போனது
பேருந்து நெரிசலில்...
- இரா.தேவசேனா
இதழ் - 9 ( 03.2006)
1. உண்டு இல்லை என்று
உண்டில்லாமல் செய்கிறது
வருடந்தோரும் நுழைவுத்தேர்வு
- செந்தில் பாலா