வியாழன், 1 டிசம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 3

குறிஞ்சி வட்டம் நிகழ்ச்சி பதிவிதழ் - 4 இல் இருந்துதான் அதிகமான ஹெக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவ்விதழில் இடம்பெற்ற பாரதிமணியனின் பனங்காய் வண்டி பிற்பாடு அதே தலைப்பில் நூலாக வெளிவந்தது. 







  இதழ் - 4 (07.2005)

1.    பேருந்து இருக்கை
              இடம் பிடித்திருக்கிறது
               ஒற்றை மல்லிகை

2.    மரக்கிளையில் தொங்கும்
              விறகுவெட்டியின்
,             சோற்றுச் சட்டி.
      -       நாணற்காடன்

3.    மார்கழி இரவு
              குளிரில் நீந்தும்
              மீன்கள்
-       சு.கணேஷ்குமார்

4.    காயம் ஆறுவதற்குள்
தீர்ந்து விடுகிறது
மாத்திரை.
-       மு.குணசேகரன்

         



       பனங்காய் வண்டி: பாரதிமணியன்

1.                                  அதிக வட்டி அதிக வட்டி
             முதலீட்டாளர்களுக்கு
              நாமக்கட்டி!

2.                                 சாதி வாழ்க சாதி வாழ்க
             வாழ வேண்டாமா
             சாதி தலைவர்

3.                                மழை நாளில்
             குடையும் தொலையும்
             திருமண வீடு!

4.                               வாங்கிய கடனில் விளைந்த நெல்
             கடன்போக மீந்தது
             பெரிய வைக்கோற்போர்!

5.                                ஐந்து லிட்டர் கேனில்
             ஏழு லிட்டரும் கொள்ளும்
             ரேசன் கடையில்!

6.                                பேருந்தில் பிதுங்கும் கூட்டம்
              நடந்தால் நல்லது
              மாதக்கடைசி!

7.                                   புது டயர் மாற்ற
              கிடைத்த பழைய டயர்
              பையனுக்குக் கிடைத்த புது வண்டி

8.                                    எத்தனையோ புத்தகங்கள்
               வாங்க காசில்லை
               சுண்டல் மடித்த காகிதமே சுவை

9.                                    மின்சாரம் இல்லாத
               புழுக்க ராத்திரி
               படிக்க ஆசை

10.                               கிரிவலம்
               உடனடி பலன்
               கால்வலி!

1 கருத்து:

  1. அழைப்பிதழ் வடிவிலான அச் சிறு பதிவு மிக அழகான வடிவமைப்பில் இருக்கும். தொடர்ந்து எனது ஹைக்கூக்களும், கவிதைகளும் அதில் இடம் பெறும். அழைப்பிதழ் தொடர்ந்து அனுப்பியும் வைப்பீர்கள். ஒரு முறைகூட அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியா வருத்தம் எனக்குள் இப்போதும் உண்டு. தோழர்.ஜெ.ராவுக்கு என் அன்பு

    பதிலளிநீக்கு