செவ்வாய், 6 டிசம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 5




இதழ் - 6 ( 09.2005)

1.                       மேடையில் பேசினார்
        சின்னத்திரை இயக்குநர்
        அழுவாமல்...
-       செஞ்சி தமிழினியன்

2.                  திட்டத்தை நிறைவேற்றியது
      மழைநீரை சேகரித்தபடி
      சாலையில் குழி!
-       செந்தில் பாலா

3.               இடிபாடுகளில் சிக்கியும்
     உயிரோடு இருக்கிறேன்
    பேருந்து பயணம்.
-       கு.கிரிஜா

4.               நின்றது மழை
    எங்கே விழுந்ததோ
    கடைசித்துளி!
-       நாணற்காடன்

5.             தோன்றிய கவிதை
    நசுங்கிப் போனது
   பேருந்து நெரிசலில்...
-       இரா.தேவசேனா


இதழ் - 9 ( 03.2006)

1.                         உண்டு இல்லை என்று
          உண்டில்லாமல் செய்கிறது
          வருடந்தோரும் நுழைவுத்தேர்வு

                          - செந்தில் பாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக